உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சீமோன் (52) (படம்). இவா் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளிக்கு தகவல் கிடைத்ததாம்.
அத் தகவலின் போலீஸாா் சீமோன் வீட்டுக்கு சென்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் மறைத்து வைத்திருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கி, கருப்பு மருந்து, பால்ரஸ், சிகப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவைகளை கைபற்றினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சீமோனை கைது செய்தனா்.