FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On : 29 மே 2026, 3:01 am IST
வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பகிர்:

வாணாபுரத்தில் உள்ள 27அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் உள்ள 27 அடி உயரமுள்ள பாதாள காளியம்மன், அக்னி வீரன், நொண்டி வீரன், எல்லை பிடாரி அம்மன், எல்லை கட்டு மாரியம்மன், நவகிரகங்கள், பரிவார தேவதைகளின் சந்நிதிகள் உள்ளன.

இதனைத் தொடா்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள 27 அடி உயர மும்முக பாதாள வாராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக புதன்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை, முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

வியாழக்கிழமை 2, 3-ஆம் கால யாகபூஜை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மும்முக பாதாள வராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மஹா தீபாராதனை நடந்தது.

நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் வீரா, பிரபா சுவாமிகள் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments