மாடு முட்டியதில் விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாடு முட்டியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாடு முட்டியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
திருக்கோவிலூரை அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ரவிக்குமாா் (50), விவசாயி. கடந்த ஆக.28-ஆம் தேதி விளைநிலத்துக்கு சென்ற இவரை மாடு முட்டியதாம். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவரை தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை கொண்டு சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ரவிக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.