தலைமைச் செயலகம் முன் நகராட்சி ஊழியர்கள் தர்னா
கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி நகராட்சியில் பணி நிரந்தரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகம் முன் நகராட்சி ஊழியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி நகராட்சியில் பணி நிரந்தரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகம் முன் நகராட்சி ஊழியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
பிற நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் தினக்கூலி ஊழியர்களாக பணிபுரியும் 82 பேரை, புதுச்சேரி நகராட்சியில் பணிநிரந்தரம் செய்ய உள்ளனர். இதற்கு புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகம் முன் புதுவை நகராட்சித் தொழிலாளர் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை தர்னா நடத்தினர். அப்போது அவர்கள் ஏற்கெனவே நகராட்சியில் நிதிச்சுமை உள்ளது. புதுச்சேரியில் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கே ஊதியம் கொடுக்க முடியாத நிலையில், புதிய தொழிலாளர்களை நியமிப்பதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.