FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்போம்; பேரவைத் தலைவர்

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் கருத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:23 am IST
பகிர்:

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் கருத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக, பேரவைக் கூட்டம் முடிந்து வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுமதித்துள்ளோம். இந்த அனுமதி வருகிற செப்.11 வரை பொருந்தும்.
 அன்றைய தினத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 உச்சநீதி மன்றத்தில் வழக்கு எப்படி செல்கிறது எனப்பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 உச்ச நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக கருத்து கேட்டால் சட்டப்பேரவை தனது கருத்தை தெரிவிக்கும் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments