FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடி கைது

புதுச்சேரி அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடி கைது செய்யப்பட்டார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுச்சேரி அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடி கைது செய்யப்பட்டார்.
 புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (எ) ராஜதுரை (25). ரெளடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராஜதுரை கையில் ஆயுதத்துடன் இருந்ததாக கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செளத்ரி பிறப்பித்த உத்தரவின்பேரில் ராஜதுரையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கரிக்கலாம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments