பிரான்ஸில் உயர் கல்வி பயில புதுவை பல்கலை. மாணவர்கள் தேர்வு
புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸில் உயர் கல்வி படிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸில் உயர் கல்வி படிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் அறிவாற்றல் உலகத் தரமிக்கதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உயர் கல்வி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரெஞ்சு துறைத் தலைவரும், கலைப்புல முதன்மையருமான பேராசிரியர் நளினி ஜே. தம்பி மேற்கொண்ட முயற்சியால் பிரெஞ்சு துறையில் முதுகலைப் படித்து வரும் மாணவிகள் அன்புபாரதி ரவிந்திரன், அருந்ததி மொகந்தி, எஸ்டெல்லா பிரான்சிஸ், முதுகலைப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த கல்வி பயின்று வரும் ஆனந்து கிருஷ்ணா உள்ளிட்ட நான்கு பேர் பிரான்ஸில் உயர் கல்வி பயில தேர்வாகியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.