FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுவை பல்கலை. பேராசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு

புதுவை மத்திய பல்கலைக்கழக பயன்பாட்டு உளவியல் துறை பேராசிரியர் சிபிநாத் தேப் எழுதிய, "நேர்மறையான கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு- ஒரு சர்வதேச கண்ணோட்டம்' என்ற நூல்

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

புதுவை மத்திய பல்கலைக்கழக பயன்பாட்டு உளவியல் துறை பேராசிரியர் சிபிநாத் தேப் எழுதிய, "நேர்மறையான கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு- ஒரு சர்வதேச கண்ணோட்டம்' என்ற நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
 இந்த நூலை பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் வெளியிட்டார். பின்னர் துணைவேந்தர் குர்மீத் சிங் பேசுகையில், ஒரு மாணவரின் வளர்ச்சிக்கு பள்ளியின் பங்கு மிக முக்கியமானதாகும்.
 மேற்படி புத்தகத்தில் பள்ளி கல்வியியல் குறித்தும், அதன் அடிப்படைத் தன்மை, முக்கியத்துவம், வளர்ச்சி, பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புணர்ச்சிகள், பள்ளிச் சூழல் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
 இப்புத்தகம் மொத்தம் 22 அத்தியாயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நேர்முறை கல்வியின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கிறது. மேலும் அணைத்து அத்தியாயங்களும் ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டு சரியான கண்ணோட்டத்தில் பள்ளிக் கல்வி துறையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான வழிவகைகளை எடுத்துரைக்கிறது என்றார்.
 இந்த புத்தகத்தை ஸ்பிரிங்கர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments