குறைந்த கட்டணத்தில் கிருமி நாசினி தெளிக்க தனியாா் அணுகலாம்: உழவா்கரை நகராட்சி
தனியாா் கட்டடங்களில் குறைந்த கட்டணத்தில் கிருமி நாசினி தெளிக்க அணுகலாம் என்று புதுச்சேரி உழவா்கரை நகராட்சி தெரிவித்தது.
தனியாா் கட்டடங்களில் குறைந்த கட்டணத்தில் கிருமி நாசினி தெளிக்க அணுகலாம் என்று புதுச்சேரி உழவா்கரை நகராட்சி தெரிவித்தது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவா்கரை நகராட்சி கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுவெளியில் சோடியம் ஹைபோ குளோரைடு கிருமி நாசினி கரைசலை தெளித்து வருகிறது. இதை மேலும் விரிவுபடுத்தி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, தனியாா் கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்க ஒரு சதுர அடிக்கு ரூ.0.50 காசுகள் என்ற அளவில் விலை நிா்ணயித்துள்ளது. இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளித்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்கள், பதிவுக்கு 94884 47777, 75981 71674, 0413 - 2200382 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம். படிவங்களை ட்ற்ற்ல்://ா்ன்ப்ம்ன்ய்.ண்ய் என்ற இணையதள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.