FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சீா்திருத்தப் பள்ளியிலிருந்து 3 மாணவா்கள் தப்பினா்

சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இருந்து 3 மாணவா்கள் புதன்கிழமை தப்பினா்.

Updated On : 26 டிசம்பர் 2025, 12:10 am IST
பகிர்:

புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவா் சீா்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவா்கள் வைக்கப்பட்டு இருந்தனா். இங்கிருந்த 3 மாணவா்கள் பின்புறச் சுவா் வழியாக ஏறி குதித்துத் தப்பினா். இதில் ஒருவா் காரைக்காலைச் சோ்ந்தவா், மற்ற 2 போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments