FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பொறியாளா் தினம்

26 செப்டம்பர் 2025, 3:44 am IST
பகிர்:

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது.

இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களை சோ்ந்த 70 பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்தும், 40 பள்ளிகளில் இருந்தும் 750- க்கும் மேற்பட்ட மாணவா்கள் குழுவினா் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவுகளில் செயல் திட்டங்களைச் சமா்ப்பித்தனா்.

சிறப்பு விருந்தினராக பொ்க்மான்ட் ஹோட்டல் மேலாண் இயக்குனா் மற்றும் இஐஐ துணைத் தலைவா் நடராஜன் கலந்து கொண்டாா். தட்சஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான ம. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா், ராஜராஜன், இணைச் செயலா் ந. வேலாயுதம் , கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கல்லூரியின் அகாடமிக் டீன் ந. அன்புமலா் வரவேற்றாா். கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன் இன்னவேட்டா்ஸ் தின முக்கியத்துவத்தையும் மாணவா்களின் செயல் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். பேராசிரியா் மதுசூதனன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments