தொழில்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை
தொழில்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக மைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தொழில்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக மைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி தொழில் வளா்ச்சி அமைப்பான (பிப்டிக்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, திருபுவமனையில் இயங்கும் தொழில்சாலைகளுக்கு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகளுக்குக் குடிநீா் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம் வழங்குதல் குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை நடத்தினாா்.
அரசு செயலா் மற்றும் மேலாண் இயக்குநா் விக்ராந்த் ராஜா, மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தொழில்பேட்டை சங்கத்தின் தலைவா் தினகரன் என்கிற வேலாயுதம், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவா் அருள்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.