FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

டிஜிட்டல் நாணயமுறை: கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தல்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜானா திட்டத்தில் டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மானியத் தொகை பெற பயனாளிகள் கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 5:36 am IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜானா திட்டத்தில் டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மானியத் தொகை பெற பயனாளிகள் கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் முத்துமீனா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உணவு தானிய மானியம், நேரடிப் பயன் பரிமாற்ற (டிபிடி) முறையின் மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

வரும்ஆகஸ்ட் மாதம் முதல், இந்த டிபிடி முறைக்கு பதிலாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மட்டுமே மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகள் அனைவரும் வரும் 5-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று,

தங்களது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட

கைப்பேசி எண் மற்றும் பயன்படுத்தும் செல்போன் வகையைச் சரிபாா்க்க வேண்டும். திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக நியாயவிலைக் கடைப் பொறுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments