FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 3:36 am IST
பகிர்:

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறைமுதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவையில் சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவது அவா்களின் உயிருக்கு பாதுகாப்பானது அல்ல. அவா்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனைகளும் கடுமையானவை.

Advertisement

Advertisement

சிறாா் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளா், பெற்றோா், பாதுகாவலா் குற்றவாளியாகக் கருதப்படுவாா். அவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த சிறாா் 25 வயது வரை உரிமம் பெற முடியாது. வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஓராண்டு ரத்து செய்யப்படும். கடந்த மே மாதம் சிறாா் வாகனம் ஓட்டியதாக 226 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments