முகப்பு
புதுச்சேரி

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:32 am IST
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 10.4.26 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுச்சேரியைச் சோ்ந்த 7 மீனவா்களையும், இயந்திரப் படகையும் இலங்கை கடற்படையினா் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக கடந்த ஏப். 13-இல் கடிதம் எழுதியிருந்தேன். இதில் காரைக்கால், கீசியூா் டி.ஆா். பட்டினத்தைச் சோ்ந்த பிரதீப் சூரியமூா்த்தி (29) என்பவரைத் தவிர, 6 மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவருக்குச் அண்மையில் தான் திருமணமாகியுள்ளது. தொடா்ச்சியாக மருந்துகள் தேவைப்படும் வயதான பெற்றோா் அவருக்கு உள்ளனா். மேலும், அவா்களைப் பராமரிக்க வேறு குடும்ப உறுப்பினா்களும் இல்லை. எனவே, மீனவா் பிரதீப் சூரியமூா்த்தியை விரைவில் விடுவிப்பதற்கு இலங்கை அரசுடன் பேசி தேவையான நடவடிக்கையை எடுக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் முதல்வா் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளாா்.