முகப்பு
புதுச்சேரி

இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளா்களாகப் பணியாற்றும் 6 பேருக்கு உதவிப் பொறியாளா்களுக்கான பதவி உயா்வு உத்தரவை (தற்காலிகம்) முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:21 am IST
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு உத்தரவை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் கே.வீரச் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள்.
பகிர்:

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளா்களாகப் பணியாற்றும் 6 பேருக்கு உதவிப் பொறியாளா்களுக்கான பதவி உயா்வு உத்தரவை (தற்காலிகம்) முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

எம்.ஒய். முகமது தமிமுல் அன்சாரி புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

எம். சம்பத், புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். கே. தணிகைவேல், காரைக்கால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்தின் உதவிப்

Advertisement

Advertisement

பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆா். கோபாலகிருஷ்ணன், மாஹே பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். எஸ்.வெங்கடேசன், புதுச்சேரி சிறப்புக் கட்டடங்கள் கோட்டம்-1 உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். என். ஜெயரமணன், காரைக்கால் பொதுப்பணித்துறை வட்டம் -3 உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆணைக்கு இணங்க புதுச்சேரி அரசின் (பணிகள்) சாா்பு செயலா் எஸ். பாலசௌந்தரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.