முகப்பு
விழுப்புரம்

பேருந்து மோதியதில் பேராசிரியர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்தார்.

Updated On : 21 மார்ச் 2017, 11:31 am IST
பகிர்:

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்தார்.
 திண்டிவனம் கல்லூரிச் சாலை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமரகுரு (41). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதானம் அருகே திங்கள்கிழமை நடந்து சென்ற இவர் மீது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதாகத் தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.