FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நூலகத்துக்கு  மின் சேமிப்புக் கலன் அளிப்பு

திருக்கோவிலூர் கிளை நூலகத்துக்கு மின் சேமிப்புக் கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது.  

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:53 am IST
பகிர்:

திருக்கோவிலூர் கிளை நூலகத்துக்கு மின் சேமிப்புக் கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது. 
திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
 வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விளந்தை அ.சண்முகம், முனைவர் வீர.நாராயணன், மாவட்ட நலக் கல்வியாளர் ப.அன்புநிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். 
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.சுப்பிரமணியன் வாசிப்பின் அவசியத்தை விளக்கிப் பேசினார். 
 திருக்கோவிலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் 
கு.கல்யாணகுமார், நூலகப் பயன்பாட்டுக்கு நன்கொடையாக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின் சேமிப்புக் கலன் வழங்கினார். 
மாவட்ட நூலக அலுவலக பதிவறை உதவியாளர் த.சர்வர்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் வெ.ஆனந்தி நன்றி 
கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments