வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நாகராஜன் பொறுப்பேற்பு
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவராக பொ.நாகராஜன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவராக பொ.நாகராஜன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் காவல் துறைத் தலைவராக இருந்த ஸ்ரீதர் பி.சி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வடக்கு மண்டல காவல்துறைத் தலைவராக பொ.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
புதிய ஐஜியாக பொறுப்பேற்ற அவருக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.