செஞ்சியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, செஞ்சியில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை (செப்.6) வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பதென முடிவு செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, செஞ்சியில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை (செப்.6) வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பதென முடிவு செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதன் மீதான கலால் வரி குறைப்பு இல்லை என அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து புதன், வியாழக்கிழமை (செப்.5, 6)ஆகிய இருநாள்களும் நீதிமன்றப் பணியை புறக்கணிப்பதென ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்கல்வராயன், பார்அசோசியேஷன் சங்கத் தலைவர் ஆத்மலிங்கம் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.