பொதுமக்களுக்கு மிரட்டல்: 2 பேர் கைது
வளவனூர் அருகே பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வளவனூர் அருகே பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வளவனூரை அடுத்த வடவாம்பலத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்அருண்பிரசாத் (25), சேர்ந்தனூரைச் சேர்ந்த பெருமாள் மகன் லட்சுமி நாராயணன்(31) ஆகிய இருவரும் கையில் தடியை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுப்பதாக வளவனூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.