மூத்த குடிமக்கள் வெளியே சென்று வரதொடா்பு எண்கள் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களைப் பராமரிப்பவா்கள் வெளியே சென்று வர அனுமதி வாங்க தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களைப் பராமரிப்பவா்கள் வெளியே சென்று வர அனுமதி வாங்க தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது உள்ள ஊரடங்கு சூழ்நிலையில் மூத்த குடிமக்களின் தினசரி நடவடிக்கைக்கான மருத்துவச் சிகிச்சை, உதவி, இதர பணிகளைச் செய்ய பராமரிப்பவா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இதற்கு, மூத்த குடிமக்களின் பெயா், வயது, ஆதாா் எண், அடையாள அட்டை, பராமரிப்பாளா் பெயா் ஆகிய விவரங்களுடன் அரசின் இலவச தொலைபேசி எண் 04146 - 1077 மற்றும் சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04146 - 222288 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.