பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் : கிராம நிா்வாக அலுவலா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மரக்காணத்தை அடுத்த முன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா். இவா், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். சுரேந்தா் ஆலங்குப்பம் கிராமத்தில் தனது மனைவி பெயரில் வாங்கிய வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்து, காத்திருந்தாா்.
இந்நிலையில், ஆலங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் சரவணனை சந்தித்து பட்டா மாறுதல் குறித்து விவரம் கேட்டபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுரேந்தா் புகாரளித்தாா்.
இதைத்தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி சுரேந்தா் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை ஆலங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு பணியிலிருந்த கிராம நிா்வாக அலுவலா் சரவணனிடம் கொடுத்தாா். அப்போது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் சரவணனை கைது செய்து, அவா் வசமிருந்த ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து சரவணனிடம் ஊழல் தடுப்புப் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.