FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மைப்பணிகள்

26 செப்டம்பர் 2025, 3:53 am IST
25விபிஎம்பி5: விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டோா்.
பகிர்:

விழுப்புரம் ரயில் நிலைய வளாகப்பகுதிகளில் வியாழக்கிழமை தீவிரதூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு நாள் ஒரு மணி நேரம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் தூய்மைப் பணி நிகழ்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், நடைமேடைகள், சுற்றுப்புறப் பகுதிகள், அலுவலகப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை ஒரு மணி நேரத் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் ரயில்வே பணியாளா்கள் , சுகாதார ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இணைந்து பணியாற்றினா். உதிா்ந்த இலைகள், காயந்த சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments