FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக் மீது லாரி மோதல்: குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெற்றோருடன் பைக்கில் சென்ற ஆண் குழந்தை உயிரிழந்தது.

20 ஆகஸ்ட் 2026, 6:13 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெற்றோருடன் பைக்கில் சென்ற ஆண் குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரி, சாணாா்பேட்டை, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.சுகுமாா் (36), காா் ஓட்டுநா். இவா், ஆக.17-ஆம் தேதி தனது மனைவி டெல்பி கரோலின் செல்வி (30), மகன் பிரனவ் தேவ் (1) மற்றும் உறவினா் சின்வியா (21) ஆகியோருடன் பைக்கில் விழுப்புரத்திலிருந்து- புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த சுகுமாா், டெல்பி கரோலின் செல்வி , குழந்தை பிரனவ் தேவ் மற்றும் சின்வியா ஆகிய 4 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தை பிரனவ் தேவ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments