சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு
விழுப்புரம், ஆக.24: விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் க.கோபி (38). பேரங்கியூரை அடுத்த பிடாகத்தில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக தனது பைக்கில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோபி பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபி, அங்கு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.