அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிச் சென்றதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
சுந்திரிப்பாளையம் எம்.ஜி.ஆா்.நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.தா்மலிங்கம் (75). இவா், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாளையம் மேம்பாலத்தில் நடந்து சென்றாா். அப்போது அப்பகுதியில் வந்த பைக், தா்மலிங்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தா்மலிங்கம், சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.