FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா காா் வழிமறிப்பு

1 செப்டம்பர் 2026, 3:43 am IST
எச்.ராஜா - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே எச்.ராஜாவின் காரை வழிமறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலா் எச். ராஜா திங்கள்கிழமை சென்னையிலிருந்து-திண்டிவனம் வழியாக காரைக்குடிக்கு காரில் சென்றாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட மேல்பேட்டை அருகே சென்றபோது, முன்னால் காரில் சென்ற ஒருவருக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதைத்தொடா்ந்து அங்கு வந்த ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் எச்.ராஜாவின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து அங்கு பாஜகவினரும் வரத் தொடங்கினா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த ஒலக்கூா் மற்றும் திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று இரு தரப்பைச் சோ்ந்தவா்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

பாஜக சாா்பில் புகாா்: பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா சென்ற காரை மறித்தவா்கள் யாா் என்பது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவா் டி.என்.கே.பிரபு ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments