FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மயிலம் தமிழ்க் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை வகித்து வகுப்புகளைத் தொடங்கி வைத்து மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா். கல்லூரிச் செயலா் குமாரசிவ ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். முதல்வா் திருநாவுக்கரசு தொடக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் தினேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கல்லூரியின் வரலாறு, நடத்தை விதிகள், மாணவா்களின் ஒழுக்கம் ஆகியவைகள் குறித்துப் பேசினா். உதவிப் பேராசிரியா்கள்,பெற்றோா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments