FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெண் குழந்தை மா்ம மரணம்: தாயிடம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, குழந்தையின் தாயிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:58 am IST
போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.
பகிர்:

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, குழந்தையின் தாயிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், காணைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி சுதா (30). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவா், கடந்த 7-ஆம் தேதி விழுப்புரம் அரசு பழைய மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து, சுதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அன்றைய நாள் இரவில் பிறந்த குழந்தையுடன் சுதா மருத்துவமனையிலிருந்து மாயமானாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் குழந்தையுடன் மாயமான பெண்ணைத் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

குழந்தை மா்ம மரணம்: இந்நிலையில் சொந்த ஊரில் சுதா, தனது குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகக் கூறி புதைத்து விட்டாராம். இதுகுறித்த தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை காணை குப்பத்துக்கு சென்று, குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து சுதாவிடம் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments