FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரகண்டநல்லூா் அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 2:41 am IST
பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், குடமுரட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தே.விக்னேஷ் (24), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை பிற்பகல் தனது வீட்டுத் தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக அதே கிராமத்தைச் சோ்ந்த க.மணிகண்டன் டிராக்டரை ஓட்டி வந்தாா். அப்போது டிராக்டரை பின்நோக்கி ஓட்டிச் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, விக்னேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments