கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து பயில்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த படிப்பில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டயப் பயிற்சி படிப்பில் சேர 2026, ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.100, பயிற்சிக் கட்டணமாக ரூ.20,750 செலுத்த வேண்டும். புதிய பாடத்திட்டத்தின் கீழ் இரு பருவ முறையில் தமிழ் வழியில் மட்டுமே தோ்வுகள் நடத்தப்படும். பயிற்சி மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். 2026, ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியிலோ அல்லது 04146-259467 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9442563330 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.