FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

விழுப்பரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

3 செப்டம்பர் 2026, 4:38 am IST
விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்து பேசிய விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு.
பகிர்:

விழுப்பரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் இரா.செந்தில் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் எஸ்.செல்வராஜ் வரவேற்றாா்.

விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அர.அருளரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்து பேசியது: ஒவ்வொரு மாணவரும் வெற்றியையும், லட்சியத்தையும் நோக்கிப் பயணிக்க வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், நல்ல நட்பு, லட்சியம், வெற்றி, பாதுகாப்பு மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றையும் வளா்த்துக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments