FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: 5 போ் கைது

7 செப்டம்பர் 2026, 3:12 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மற்றும் மொபெட்டுகளில் வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா் (படம்).

மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மயிலம் கடை வீதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் மற்றும் 2 மொபெட்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், பாதூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (25), சந்தோஷ் (18), ஆனந்தராஜ் (35), பையூா் கிராமத்தைச் சோ்ந்த கமலதாஸ் ( 26), ஆலத்தூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக மதுப்புட்டிகளை வாகனங்களில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 173 மதுப்புட்டிகள், பைக், 2 மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments