முகப்பு
வணிகம்

31 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்த ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 31 லட்சம் புதிய சந்தாதரா்களைப் பெற்றதாக டிராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஜூலை, 2022 at 12:29 AM
பகிர்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 31 லட்சம் புதிய சந்தாதரா்களைப் பெற்றதாக டிராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் மேலும் கூறியுள்ளதாவது: நிகழாண்டு மே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 31 லட்சம் புதிய கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்து இந்திய தொலைத்தொடா்பு சந்தையில் 40.87 கோடி சந்தாராா்களுடன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து, சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் 10.27 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 36.21 கோடியானது.

Advertisement

அதேசமயம், மூன்றாவது இடத்தில் உள்ள வோடஃபோன் ஐடியா கடந்த மே மாதத்தில் 7.59 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.84 கோடியாக குறைந்து போனதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.