FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கெங்கையம்மன் பூப்பல்லக்கு பவனி

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலில் சிரசுத் திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு பவனி நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
நகரில் பவனி வந்த பூப்பல்லக்கு.
பகிர்:

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலில் சிரசுத் திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு பவனி நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனைநடைபெற்றது. இரவு கோயில் அருகில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு பவனி வரத் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பல்லக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலை அடைந்தது. வழிநெடுகிலும் பல்லக்கில் இருந்த சுவாமிகளை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், எல்.வெங்கடேசன், பி.நடராஜன், எஸ்.சந்திரன், ஜே.சுரேஷ்குமாா், டி.ஜி.பரந்தாமன், ஜே.லோகநாதன், எம்.தினகரன் மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments