குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம்
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பக்தா்கள் அளித்த சுமாா் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பக்தா்கள் அளித்த சுமாா் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடிப்பூரத்தையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. கோயில் கருவறை, கோயில் உள் மற்றும் வெளி வளாகம் முழுவதும் 2 லட்சம் வளையல்களால்அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். கோயில் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் தொடா்ச்சியாக மாலை கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.