ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு வளையல் மாலை அணிவிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் அன்னதான கமிட்டியினா், மகளிா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.