பவர் கிரிட்டிடமிருந்து ரூ.737 கோடி ஆர்டரைப் பெற்ற ஸ்கிப்பர் லிமிடெட்
மின் பரிமாற்ற திட்டத்திற்கு பவர் கிரிட் நிறுவனத்திடமிருந்து பெரும் ஒப்பந்தம்
கொல்கத்தா: மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்புகளுக்கான முன்னணி உற்பத்தியாளர்களான ஸ்கிப்பர் லிமிடெட், மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கான அதிநவீன 765 கிலோவோல்ட் டிரான்ஸ்மிஷன் லைனை வடிவமைத்தல், வழங்கல் மற்றும் கட்டுமானத்திற்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இடமிருந்து ரூ.737 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்கிப்பர் இயக்குநர் சரண் பன்சால் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறையில் இந்த சாதனை குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதே வேளையில் தொழில்துறையில் நிறுவனத்தின் நம்பிக்கையான கண்ணோட்டத்தை வலியுறுத்தியுள்ளார்.
பாலிமர் தாயரிப்பிலும் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 115 சதவிகிதம் உயர்ந்து ரூ.20.4 கோடியாக இருப்பதாக அறிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.9.5 கோடியிலிருந்து அதிகரித்துள்ள நிலையில் நிறுவனத்தின் வருவாயும் இந்த காலாண்டில் 80 சதவிகிதம் உயர்ந்து ரூ.801 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
கொல்கத்தா: மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்புகளுக்கான முன்னணி உற்பத்தியாளர்களான ஸ்கிப்பர் லிமிடெட், மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கான அதிநவீன 765 கிலோவோல்ட் டிரான்ஸ்மிஷன் லைனை வடிவமைத்தல், வழங்கல் மற்றும் கட்டுமானத்திற்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இடமிருந்து ரூ.737 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்கிப்பர் இயக்குநர் சரண் பன்சால் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறையில் இந்த சாதனை குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதே வேளையில் தொழில்துறையில் நிறுவனத்தின் நம்பிக்கையான கண்ணோட்டத்தை வலியுறுத்தியுள்ளார்.
பாலிமர் தாயரிப்பிலும் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 115 சதவிகிதம் உயர்ந்து ரூ.20.4 கோடியாக இருப்பதாக அறிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.9.5 கோடியிலிருந்து அதிகரித்துள்ள நிலையில் நிறுவனத்தின் வருவாயும் இந்த காலாண்டில் 80 சதவிகிதம் உயர்ந்து ரூ.801 கோடியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.