ரூ. 212 கோடி மதிப்பிலான மின் கட்டமைப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றிய ராஜேஷ் பவர்!
ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 211.68 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக ராஜேஷ் பவர் இன்று தெரிவித்தது.
புதுதில்லி: ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 211.68 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக ராஜேஷ் பவர் இன்று தெரிவித்தது.
மெந்தாசல் உள்ள ஏஐஎஸ் மற்றும் ஜிஐஎஸ் மின்நிலையங்களை இணைக்கும் 220 கிலோ வோல்ட் நிலத்தடி மின்பரிமாற்ற கேபிள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தங்களும் அதே வேலையில், ஏஐஎஸ் மற்றும் ஜிஐஎஸ் துணை மின்நிலையத்தின் விரிவுபடுத்தும் பணிகளும் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தமானது, ஒடிசாவின் பவர் நிறுவனத்தின் நுழைவைக் குறிப்பதோடு, இந்தியா முழுவதும் அதன் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தும். அதே வேளையில், மின் கடத்திக் கட்டமைப்புத் துறையில் ராஜேஷ் பவர் பெற்ற மிகப்பெரிய ஒப்பந்தமும் இதுவே ஆகும்.
Advertisement
Advertisement
தற்போது குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களை ராஜேஷ் பவர் செயல்படுத்தி வருகிறது.
Rajesh Power Services on Wednesday said it has secured new orders worth Rs 211.68 crore from OPTCL.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.