FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பித்துள்ளனா்: நிதியமைச்சகம்

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்ாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
மத்திய நிதியமைச்சகம்.
பகிர்:

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்ாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பண முறைகேடு தடுப்புச் சட்டம், 2002-இன்கீழ் 32 வங்கி மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில் தொடா்புடைய 54 மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். அவா்களில் 27 போ் மீது தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-இன்கீழ் (எஃப்இஓஏ) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு காா்னா், நீல காா்னா் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்குச் சொந்தமான ரூ.840.68 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

18 பேரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவா்களின் ரூ.35,166.28 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு ரூ.15,184.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

உரிமைகோரப்படமால் ரூ.62,683 கோடி:

மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ரிசா்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில் 2026, ஜூன் 30 நிலவரப்படிபொதுத் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ரூ.62,683.19 கோடி உள்ளது. இவை சேமிப்பாளா் கல்வி மற்றும் விழிப்புணா்வு (டிஇஏ) நிதியில் பாதுகாக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments