நான் ஹீரோ இல்லை: நடிகர் மகேந்திரன்
நடிகர் மகேந்திரன் நடித்துள்ள ’அமீகோ கேரேஜ்’ திரைப்படம் மார்ச் 15 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ஜெய்யுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்த லேபிள் இணைய தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மகேந்திரன் நடித்துள்ள ’அமீகோ கேரேஜ்’ திரைப்படம் மார்ச் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் மகேந்திரன் பேசியதாவது”
Advertisement
Advertisement
“நான் என்றும் ஹீரோ இல்லை, உங்கள் வீட்டுப் பையன்தான். இந்த 30 ஆண்டுகளில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில்தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் ஆவணப்படம் எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா தயாரிப்பாளராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.