போகன் தெலுங்கு ரீமேக்கில் ஹன்ஷிகா வேடத்தில் காத்ரீன் தெரேஸா!
காத்ரீன் மலையாளத்தில் இருந்து ‘மெட்ராஸ்’ திரைப்படம் வாயிலாக தமிழுக்கு அறிமுகமாகிப் பின் கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார்.
தமிழில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த ‘போகன்’ திரைப்படம் டோலிவுட்டில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது ரவி தேஜா என்றும், ஹன்ஷிகா மோத்வானி ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது காத்ரீன் தெரேஸா என்றும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்ரீன் மலையாளத்தில் இருந்து ‘மெட்ராஸ்’ திரைப்படம் வாயிலாக தமிழுக்கு அறிமுகமாகிப் பின் கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார். டோலிவுட்டில் காத்ரீன் நடிப்பில் வெளிவந்த அனைத்துப் படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை. ‘ருத்ரம்மாதேவி’ முதல் கடந்த வருடத்தில் வசூலில் சாதனை புரிந்த அல்லு அர்ஜூனின் ‘சரைனோடு’ மற்றும் சமீபத்தில் வெளியான ராணாவின் ‘நேனே ராஜு... நேனே மந்திரி’ வரை காத்ரீன் இடம் பெற்ற திரைப்படங்கள் அனைத்திலும் தன்னை நம்பி வந்த ரசிகர்களை காத்ரீன் ஏமாற்றியதே இல்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள். தான் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த காத்ரீன் தற்போது ‘போகனில்’ ஹன்ஷிகா ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது அவரது நடிப்புத் திறனுக்குக் கிடைத்த பரிசு என்கிறது டோலிவுட். இந்தப் படத்தில் நடிப்பதன் வாயிலாக டோலிவுட்டில் காத்ரீனின் கிராஃப் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Related Article
‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ படத்தில் அர்ஜூன், சரத்குமாருடன் இணையும் அல்லு அர்ஜூன்!
Advertisement
Advertisement
காஜல் அகர்வால் 'குயின்' ஆகிறார்!
சிரஞ்சீவி நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் மூலம் டோலிவுட்டில் களமிறங்கும் விஜய் சேதுபதி!
பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா!
மகள் அக்ஷராவுடன் இன்று விவேகம் திரைப்படத்தை பார்க்கிறார் கமல் ஹாசன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.