முகப்பு
செய்திகள்

நாச்சியார் படப்பிடிப்பு நிறைவு: ஜி.வி. பிரகாஷ் உருக்கம்!

பாலா சார் மற்றும் ஜோதிகா மேடமுக்கு நன்றிகள்...

Updated On : 22 ஜூலை 2017, 12:38 pm IST
பகிர்:

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - இளையராஜா. 

ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது: நாச்சியார் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த ஞாபகங்கள் எப்போதும் நினைவில் நிலைக்கும். பாலா சார் மற்றும் ஜோதிகா மேடமுக்கு நன்றிகள் என்று கூறியுள்ளார்.

Advertisement

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்தப் பாணியில் பாலா இயக்கியுள்ள நாச்சியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.