முகப்பு
செய்திகள்

விஜய்யின் பிகில் பட வெளியீட்டுத் தேதி குழப்பம் தீர்ந்தது!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது.

Updated On : 17 செப்டம்பர் 2019, 11:01 am IST
பகிர்:

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது. வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை தினங்களையும் பயன்படுத்தும் விதத்தில் அக்டோபர் 25 அன்று வெளியாகவேண்டும் என்றொரு கருத்தும் நிலவியது. இந்நிலையில் விஜய் படம் தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியாவதையே ரசிகர்கள் விரும்புவதால் ஞாயிறு அன்றே, தீபாவளி தினத்தன்று பிகில் வெளியாகும் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments