பருத்திவீரனில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்
அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது.
கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்த பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான படம் - பருத்திவீரன். இந்தப் படத்தில் அப்பத்தாவாக நடித்து கவனம் பெற்றார் பஞ்சவர்ணம்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார் பஞ்சவர்ணம். இதையடுத்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது:
Advertisement
Advertisement
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.