'கேஜிஎஃப்' பட நிறுவனத்துடன் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: படமாகும் உண்மை சம்பவம்
கேஜிஎஃப் பட நிறுவனத்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் பட நிறுவனத்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிச் சுற்று, சூரரைப்போற்று படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்கிவருகிறார்.
இந்தப் படத்துக்கு அடுத்ததாக மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கேஜிஎஃப் பட நிறுவனமான ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ''என்னை மன்னிச்சுடுங்க, இனி அப்படி நடக்காது'' - ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக வருத்தம் தெரிவித்த அக்ஷய் குமார்
அதில், சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களுடைய அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளது. சூர்யா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் கேஜிஎஃப் படம் போல இந்தியா முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.