முகப்பு
செய்திகள்

விஜய் டிவி தொடரிலிருந்து திடீரென விலகும் நடிகை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஆகஸ்ட் 2022, 2:57 pm IST
பகிர்:

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவித்துள்ளார். 

விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே மிக பிரபலம். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

முதல் பாகத்தின் பெரும் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகம் ஒளிரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் முதல் பாகத்திலிருந்து ஆல்யா மானஸா மட்டும் நடிக்கத் துவங்கினார். ஆனால் சில காரணங்களால் அவர் பாதியில் விலக அவருக்க பதிலாக ரியா விஸ்வநாத் நடிக்கிறார். 

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் விஜே அர்ச்சனா முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். ராஜா ராணி 2 தொடர் மூலம் அவரை ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்ரனர். இந்த நிலையில் அவர் திடீரென இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

அவரது பதிவில், வாழ்க்கை நம் எல்லோருக்கும் பை நிறைய ஆச்சரியங்களை ஒழித்துவைத்திருக்கும். இப்போது வாழ்க்கையின் அடுத்தகட்ட திட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய தருணம். நான் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுகிறேன். 

இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. என் புதிய பயணத்தில் உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எதனால் விலகுகிறார், வேறு என்ன சீரியலில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments