முகப்பு
செய்திகள்

'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா’

Updated On : 27 ஜனவரி, 2022 at 6:31 PM
பகிர்:

கரோனா பரவல் காரணமாக ‘விக்ராந்த் ரோனா’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழுவினர் அறிவிப்பு.

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா’.

கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம் வெளியாக இருக்கிறது.

Advertisement

இப்படத்தை 3டியில் வெளியிட இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று முடிந்ததை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், இப்படம் வருகிற 2022, பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரோனா தொற்று காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.