வடக்கு கேரளத்தில் கனமழை! 24 மணி நேரத்தில் 121 மி.மீ. மழை
வடக்கு கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 121 மி.மீ. மழைப் பதிவு
கேரளத்தில் கடந்த ஒரு சில நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வடக்கு மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. இன்று காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பல இடங்களில் 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்திருக்கிறது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு வரையிலான காலத்தில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பயார் பகுதியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 121.5 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள முலியாரில் 81 மி.மீ மழையும், கண்ணூர் விமான நிலையத்தில் 74 மி.மீ மழையும் பதிவாகின; கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உருமியில் 65 மி.மீ மழை பெய்தது.
Advertisement
Advertisement
குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவான பிற இடங்களைப் பொறுத்தவரை, கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செருவஞ்சேரி மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆர்ஏஆர்எஸ் பிலிகோடு ஆகிய இடங்களில் தலா 59.5 மி.மீ மழை பதிவானது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நேரியமங்கலத்தில் 59 மி.மீ. மழை பெய்தது. 24 மணி நேரத்தில் 60 மி.மீ. அல்லது அதற்கு மேல் பதிவாகும் மழையை 'கனமழை' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.
அண்மையில் அதிகாரப்பூர்வ தகவலின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மூவாற்றுப்புழா மற்றும் தொடுபுழா ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், அவை தொடர்ந்து அபாய எச்சரிக்கை அளவை விட அதிகமாகவே இருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.